Tuesday, May 8, 2018

அகதி மாடு

சிறுபசுங்கன்றெனக்கு
காம்பில் தேக்கித் தாயணைகட்டிய
முட்டிக் குடிக்கும் மடிப்பால்

குரல்வளைக் குளிரத்
தின்று செரிக்கும்
பனித்துளி முட்டைகள்

பாடலின்றி ஆடித்திரிந்த
சாணவாசம் கமழும்
சொந்தத் தொழுவம்

எப்போதும் என் முகத்தில் முத்தமிடும்
ரவியண்ணனின் மகள்

எதெதுவோ இன்னும்
கண்களிலும் வழிகிறது
வேறொருவருக்கு விற்றுவிட்டபின்னும்

மண்ணற்று அகதியாதலின் வலி
மாட்டுப் பிறவிக்குமுண்டே

ரா.ராஜசேகர்

No comments:

Post a Comment