சிறுபசுங்கன்றெனக்கு
காம்பில் தேக்கித் தாயணைகட்டிய
முட்டிக் குடிக்கும் மடிப்பால்
குரல்வளைக் குளிரத்
தின்று செரிக்கும்
பனித்துளி முட்டைகள்
பாடலின்றி ஆடித்திரிந்த
சாணவாசம் கமழும்
சொந்தத் தொழுவம்
எப்போதும் என் முகத்தில் முத்தமிடும்
ரவியண்ணனின் மகள்
எதெதுவோ இன்னும்
கண்களிலும் வழிகிறது
வேறொருவருக்கு விற்றுவிட்டபின்னும்
மண்ணற்று அகதியாதலின் வலி
மாட்டுப் பிறவிக்குமுண்டே
ரா.ராஜசேகர்
காம்பில் தேக்கித் தாயணைகட்டிய
முட்டிக் குடிக்கும் மடிப்பால்
குரல்வளைக் குளிரத்
தின்று செரிக்கும்
பனித்துளி முட்டைகள்
பாடலின்றி ஆடித்திரிந்த
சாணவாசம் கமழும்
சொந்தத் தொழுவம்
எப்போதும் என் முகத்தில் முத்தமிடும்
ரவியண்ணனின் மகள்
எதெதுவோ இன்னும்
கண்களிலும் வழிகிறது
வேறொருவருக்கு விற்றுவிட்டபின்னும்
மண்ணற்று அகதியாதலின் வலி
மாட்டுப் பிறவிக்குமுண்டே
ரா.ராஜசேகர்
No comments:
Post a Comment