மனமடக்கி
மூளைப் பெருக்கி
யாருமறியா வெளிக்குள்
பயணிக்குமாசையில்
இலைகளின் கூச்சலொதுக்கி
கிளைகளின் பேச்சு விலக்கி
நிழல்திரவம் துடைத்து
வேர்களின் மொழியிசை கேட்க
பேராழத்தில் ஓர் அடரூடுருவல்
ஆணிவேர் சிறப்புரை
பக்கவேர்களின் பொழிப்புரை
சல்லிவேர்களின் சத்த சந்தம்
வேர்க்கூட்டத்தின் கூட்டிசையில்
நீருறிஞ்சலின் பாடல்கள்
வேர்களின் நாளங்களில்
திசுக்களின் திமிர்நடனம்
இல்லாத இசைக்கருவிகளின்
மீட்டலில்
அடர்ந்ததிரும்
பூமியின் மர்மப்பிரதேசம்
இத் தொடர்ப்புதிரின்
நீள் பயணநீள்கையில்
பெருக்கமடைந்து திமிறிய மூளையின் உச்சியில்
செருகப்பட்ட வாள் சொன்னது :
அபகரிப்புக்காளாகும் நிலத்தின் மகன் நீ
சொந்த நிலம் மீட்கப் பார்
சுதந்திரம் வேண்டுமுனக்கு
என் ஸ்ருதிலயங்களை ரசிக்கவும்
மனமுகமெங்கும் அமில எச்சில்
அகன்றெழுந்து மேலே வந்தேன்
அரிப்புடன் அமில எச்சில் துடைத்து
ரா.ராஜசேகர்
மூளைப் பெருக்கி
யாருமறியா வெளிக்குள்
பயணிக்குமாசையில்
இலைகளின் கூச்சலொதுக்கி
கிளைகளின் பேச்சு விலக்கி
நிழல்திரவம் துடைத்து
வேர்களின் மொழியிசை கேட்க
பேராழத்தில் ஓர் அடரூடுருவல்
ஆணிவேர் சிறப்புரை
பக்கவேர்களின் பொழிப்புரை
சல்லிவேர்களின் சத்த சந்தம்
வேர்க்கூட்டத்தின் கூட்டிசையில்
நீருறிஞ்சலின் பாடல்கள்
வேர்களின் நாளங்களில்
திசுக்களின் திமிர்நடனம்
இல்லாத இசைக்கருவிகளின்
மீட்டலில்
அடர்ந்ததிரும்
பூமியின் மர்மப்பிரதேசம்
இத் தொடர்ப்புதிரின்
நீள் பயணநீள்கையில்
பெருக்கமடைந்து திமிறிய மூளையின் உச்சியில்
செருகப்பட்ட வாள் சொன்னது :
அபகரிப்புக்காளாகும் நிலத்தின் மகன் நீ
சொந்த நிலம் மீட்கப் பார்
சுதந்திரம் வேண்டுமுனக்கு
என் ஸ்ருதிலயங்களை ரசிக்கவும்
மனமுகமெங்கும் அமில எச்சில்
அகன்றெழுந்து மேலே வந்தேன்
அரிப்புடன் அமில எச்சில் துடைத்து
ரா.ராஜசேகர்
No comments:
Post a Comment