என்னதான்
இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்
சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து
நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்
பேணவே முடியாப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத
ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே
களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே
மனதிலும் மண்ணிலும்
உருருளவிடும்
பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும்
திருவிழா வெளிச்சம் அணியும்
கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே
இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்
எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டும்
நட்பு மட்டுமே
செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமைதான்
ஆனால்
நண்பன் மட்டும்
பொதுவுடைமைத் தனிவுடைமை
இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்
சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து
நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்
பேணவே முடியாப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத
ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே
களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே
மனதிலும் மண்ணிலும்
உருருளவிடும்
பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும்
திருவிழா வெளிச்சம் அணியும்
கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே
இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்
எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டும்
நட்பு மட்டுமே
செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமைதான்
ஆனால்
நண்பன் மட்டும்
பொதுவுடைமைத் தனிவுடைமை
No comments:
Post a Comment